தற்போது
பயன்பாட்டில் உள்ள பிறபலமான வேதாகமங்களின் சுருக்கமான பட்டியல்:
வேதாகமம் உருவான கதை - பாகம் 6
Myles Coverdale மற்றும் John Rogers இருவரும் சேர்ந்து William Tyndale ன் கடைசி ஆறு ஆண்டு கால மொழி பெயர்ப்பு பணியினை நினைவில் கொண்டும் மார்டின் லூதரின் ஜெர்மானிய வேதாகமத்தையும், லத்தின் மொழி பெயர்ப்புகளையும் பயன்படுத்தி ஒரு முழுமையான ஆங்கில வேதாகமத்தை உருவாக்கி கி.பி 1535 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியிட்டனர். இந்த வேதாகமத்தின் பெயர் The Coverdale Bible.
John Rogers இவரை John "Thomas Matthew" Rogers என்றும்
அழைப்பார்கள். Mathew-Tendale bible என்ற வேதாகமத்தின்
ஆசிரியர் இவர் தான். இந்த வேதாகமம் தான் ஆங்கிலத்தில் வெளிவந்த இரண்டாம் வேதாகமம்.
இது தான் எபிரேயு கிரேக்க மூல பாஷைகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி
பெயர்க்கப்பட்ட முதல் வேதாகமம். William Tyndale உருவாக்கிய
வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களையும் The Coverdale Bible
யில் இருந்து பழைய ஏற்பாட்டின் கடைசி பகுதிகளான அப்போகரிபா (Apocrypha) பகுதிகளையும், கி.பி 1535 -ல் Tyndale உருவாக்கிய புதிய
ஏற்பாட்டையும் சேர்த்து கி.பி 1537 ஆம் ஆண்டு ஒரு முழு ஆங்கில வேதாகமத்தை
உருவாக்கி வெளியிட்டார். இதன் இரண்டாவது பதிப்பு கி.பி 1549 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்டது.
இந்த வேதாகமத்தை
வெளியிடவும் அதனை படிக்கவும் Henry VIII உரிமை
வழங்கினார். கி.பி 1550 ஆண்டு வரை எட்டாம் ஹென்றி அரசராக இருந்தார். இவரது
ஆட்சியில் எல்லோராலும் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. அதன் பிறகு அவரது மகன்
King Edward VI ஆட்சிக்கு வந்தார். இவர் பெந்தகோஸ்தே சபையை (Protestantism)
ஆதரித்ததால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை
ஆனால் இவரது ஆட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இவர் உடல் நல குறைவால் இறந்து போனதால்
19 ஜுலை 1553 ஆம் ஆண்டு இவரது தங்கை இராணி மேரி (Queen Mary) ஆட்சிக்கு
வந்தார். ரோம கத்தொலிக்க (Roman Catholic) திருச்சபையை ஆதரித்த இவர் அரியணையில் அமர்ந்ததுமே
பெந்தகோஸ்தே திருச்சபைக்கு கடும் எதிர்பை தெரிவித்தார்.
அந்த சமயம் John Rogers ரோம கத்தொலிக்க திருச்சபையை வெளிப்படையாக எதிர்க்க துவங்கினார். இதனால்
அவர் சிறை பிடிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 04 ஆம் தேதி 1555 ஆம் ஆண்டு மரத்தில்
கட்டிவைத்து எறிக்கப்பட்டார். இராணி மேரியால் கொல்லப்பட்ட நூற்றுகணக்கானோரில் இவரே
முதல் நபர். இவரின் கொலைக்கு பின்னர் இராணி மேரி “Bloody Mary” என்ற பட்ட
பெயருடன் அழைக்கப்பட்டார்.
கி.பி 1560 ஆம்
ஆண்டு லத்தின் வல்கேடில் இருந்தும் எபிரேயு, லத்தின் ஏடுகளில் இருந்தும்
மொழிபெயர்க்கப்பட்டு Geneva
Bible உருவாக்கப்பட்டது. இதுவே முதன் முறையாக வெளிவந்த பெந்தகோஸ்தே
வேதாகமம் ஆகும். இதனை உருவாக்கியவர் John calvin என்றாலும்
இதற்காக உழைத்த பெருமை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த John Knox, Myles
Coverdale, John Foxe மற்றும் Bloody Mary
யின் கண்களில் சிக்காமல் தப்பித்த மேலும் சில ஆசிரியர்களையே சேறும். ஜெனிவா
வேதாகமத்தின் 90% William Tyndale's வேதாகமத்தை
ஒத்தவாறு காணப்படுகிறது. இந்த வேதாகமம் தான் அதிகாரங்கள், வசனங்கள் என தனித்தனியாக
பிரித்து எண்கள் இடப்பட்ட முதல் வேதாகமம் ஆகும். இது ரோம அச்சு முறையில் ( Roman
Style Typeface) அச்சிடப்பட்டது.
இந்த வேதாகமத்திற்கு
Breeches
Bible என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிங்க் ஜேம்ஸ் வர்சன் வேதாகமம்
வெளிவருவதற்கு முன்னால் சந்தையில் கிடைத்த ஒரே வேதாகமம் இது தான். பிற்காலத்தில்
வெளிவந்த வேதாகமங்களின் 90% ஜெனிவா வேதாகமத்தை ஒத்தவாரே காணப்படுகிறது. இந்த கி.பி
1579 ஸ்காட்லாந்தில் (Scotland) வெளியிடப்பட்டது. கி.பி 1643
ஆம் ஆண்டு ஜெனிவா வேதாகமத்தை சிறிய வடிவில் Oliver Cromwell என்பவர்
The soldier’s pocket Bible என்ற பெயரில் வெளியிட்டார்.
ஜெனிவா வேதாகமம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பாக இத்தாலி, லத்தின்,
ஸ்பானிஷ், பிரஞ்சு, யூதம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த
வேதாகமத்தில் 140 க்கும் அதிகமான பதிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த வேதாகமத்தின்
கடைசி பதிப்பு கி.பி 1644 ல் வெளிவந்தது.
கி.பி 1537 ல் The
Coverdale Bible, The Matthew Tyndale Bible ஆகிய
வேதாகமங்களுக்கு உரிமை வழங்கிய அரசர் எட்டாம் ஹென்றி (Henry VIII) அதன் பிறகு கி.பி 1538 ல் இங்கிலாந்தின் எல்லா தேவாலயங்களிலும்
வேதாகமத்தின் ஆங்கில மொழி பெயர்பு கிடைக்கவும் தேவாலயங்களில் வேதாகமத்தை
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் உரிமை வழங்கினார். Myles Coverdale -ன் தலைமையில் கத்தொலிக்க திருச்சபையே வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்து கி.பி 1539 ஆம் ஆண்டு அச்சிட்டு The Great Bible என்ற
பெயரில் வெளியிட்டது. அதற்கு அடுத்த ஆண்டே அதாவது 1540 ல் அதன் மறு பதிப்பும் அதன்
பிறகு அடுத்தடுத்து ஐந்து பதிப்புகளும் அச்சிடப்பட்டன. இதற்கு இங்கிலாந்து
நிர்வாகமே உரிமங்களை வழங்கியதால் அடுத்தடுத்து வேதாகமங்கள் வெளிவர இது அடிப்படையாக
அமைந்தது. இந்த வேதாகம மொழிப்பெயர்பில் நிகழ்ந்த முக்கிய தவறு என்னவென்றால் அப்போகரிபா
Apocrypha என்ற வார்தையை Hagiographa
என்று மொழி பெயர்தது தான். Hagiographa என்ற வார்தைக்கு
புனித குறிப்புகள் என்று பொருள்.
The Great Bible வெளிவந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கத்தொலிக்க ஆயர்கள் தாங்களே
வேதாகமத்தை மொழி பெயர்க்க முன்வந்து முதலாம் எலிசபெத் இராணியின் ஆட்சிக்கு பிறகு
ஆயர் Parker -ன் வழி நடத்தலின் கீழ் கி.பி 1568 ல் The
Bishop’s Bible அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. கி.பி 1568 யில்
இருந்து கி.பி 1606 ஆம் ஆண்டுக்கு இடைபட்ட 38 ஆண்டுகளில் சுமார் 19 முறை
மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் புரோட்டஸ்டாண்டு
கிறிஸ்தவர்கள் வேதாகமங்களை மொழி பெயர்த்து வெளியிட்டு கொண்டு இருக்க மறுபக்கம்
அதற்கு போட்டியாக கத்தொலிக்க திருச்சபை வேதாகமங்களை மொழிபெயர்த்து வெளியிட்டு
கொண்டிருந்த காலம் அது. இரு தரப்பினருமே தங்கள் வேதாகமத்தில் உள்ள குறைகளை சரி
செய்ய மறு பதிப்புக்கு மேல் மறு பதிப்பாக வெளியிட்டு கொண்டு இருந்தனர். அதுநாள்
வரை ரோம திருச்சபையானது லத்தின் வல்கேட்; (Latin Vulgate) வேதாகமத்தையே திருத்தம் செய்து
வெளியிட்டு கொண்டு இருந்தது. ஆனால் புரோட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்களோ எபிரேயு,
கிரேக்க மூல ஏடுகளில் இருந்து வேதாகமத்தை மொழி பெயர்த்து கொண்டு இருந்தனர். இதனால்
புரோட்டஸ்டாண்டு வேதாகமங்களை விட
கத்தொலிக்க வேதாகமங்கள் அதிக முறண்பாடுகளுடன் காணப்பட்டன. எனவே கத்தொலிக்க
திருச்சபையின் இந்த குறைபாடுகளை கலைக்க ரெகிம்ஸ் (Rheims)
நகரில் இருந்த ஒரு கல்லூரி மூலமாக கிரேக்க மூல ஏடுகளில் இருந்து புதிய ஏற்பாட்டை
ஆங்கிலத்திற்கு மொழி பெயர்தனர். இந்த புதிய ஏற்பாடானது Rheims New
Testament என்ற பெயரில் கத்தொலிக்க திருச்சபையால் வெளியிடப்பட்டது.
அப்போது மூல மொழிகளில் இருந்து புதிய ஏற்பாட்டை மட்டும் தான் மொழி பெயர்த்தார்கள்.
பழைய ஏற்பாடானது அதன் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கி.பி 1609 ல் டூவே (Douay) என்ற நகரில் இருந்த ஒரு கல்லூரி மூலமாக மொழி பெயர்க்கப்பட்டு கி.பி 1610
ஆம் ஆண்டு Douay Old Testament என்ற பெயரில் கத்தொலிக்க
திருச்சபையால் வெளியிடப்பட்டது.
எலிசபெத் இராணி (Queen
Elizabeth I) மற்றும் நாலாம் இளவரசர் ஜேம்ஸ் (Prince James
VI) இருவரின் மறைவிற்கு பின் முதலாம் ஜேம்ஸ் ஆட்சி பொறுப்பை
ஏற்றார். இவர் கி.பி 1604 ஆம் ஆண்டு வேதாகமத்தில் திருத்தங்களை செய்து புதிய
வேதாகமம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இவர் முயற்சியில்
உருவானதுதான் The King James Bible (KJV). இது கி.பி 1611
யில் வெளியானது. இது Apocrypha புத்தகங்களையும் சேர்த்து 80
புத்தகங்கள் உள்ளடங்கியது.
இந்த வேதாகமம் Pulpit
Folio வடிவத்தில் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 15-16 inches அகலம் 10-11 inches. இது நூறு சதவீதம் பருத்தியால்
நெய்யப்பட்ட துணியில் அச்சிடப்பட்ட்து (100% rag cotton linen sheet). உலகில் அதிகமான மக்களால் பேசப்பட்டதும், உலகில் அதிகமாக விற்பனையானதும்
இந்த வேதாகமம் தான். சுமார் 250 ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான
வேதாகமங்கள் விற்பனையானது.
Robert Aitken என்பவர் முதன் முறையாக அமேரிக்காவில் The King James Bible ஐ கி.பி 1782 ஆம் ஆண்டு அச்சிட்டு மிகவும் மலிவான விலைக்கு வெளியிட்டார்.
எனவே இந்த வேதாகமம் அவரது பெயரிலேயே கி.பி 1782 Robert
Aitken’s Bible என்று
அழைக்கப்பட்டது. அவர் Apocrypha பகுதிகளை நீக்கிவிட்டு
மீதமுள்ள 66 புத்தகங்களை மட்டுமே வெளியிட்டார்.
கி.பி 1792 யில் Isaac
Collins மற்றும் Isaiah Thomas இருவரும்
சேர்ந்து அமேரிக்காவில் முதன் முதலாக குடும்பத்துடன் படிப்பதற்கான படங்களுடன்
கூடிய வேதாகமம் ஒன்றை வெளியிட்டனர். இந்த வேதாகமம் Apocrypha
உடன் சேர்த்து 80 பகுதிகளை கொண்டது.
கி.பி 1808 யில் Robert
Aitken யின் மகள் Jane Aitken ஒரு வேதாகமத்தை
உருவாக்கி வெளியிட்டார். இது Jane Aitken's Bible என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதன் முதலாக ஒரு
பெண்ணால் வெளியிடப்பட்ட வேதாகமம் ஆகும்.
இதன் பிறகு வெளிவந்த
வேதாகமங்களை விளக்கமா விவரித்தால் இன்னும் பல பக்கங்கள் நீழும் என்பதால் தற்போது
பயன்பாட்டில் உள்ள பிறபலமான வேதாகமங்களின் சுருக்கமாக பட்டியலை மட்டும் தருகிறோம்.
வேதாகமம் உருவான கதை
பாகம் 7
வேதாகமம் உருவான கதை - பாகம் 5
ஜான் ஹியூஸ் எரிக்கப்பட்டது போலவே வேதாகமத்தை பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க முயன்ற மேலும் பலர் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரபல எழுத்தாளர் John Foxe என்பவர் வேதாகமத்திற்காக இரத்த சாட்சிகளாக மரித்தவர்களை பற்றி Acts and Monuments என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி முதல் பதிப்பை மார்ச் மாதம் 20 ஆம் தேதி 1563 ஆம் ஆண்டு வெளியிட்டார். அவர் இந்த புத்தகத்தில் கி.பி 1517 ஆம் ஆண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் ஜெபிக்க கற்று கொடுத்த காரணத்தால் ஏழு பேர் மரத்தில் கட்டிவைத்து தீ வைத்து எரிக்கப்பட்டதாக பதிவு செய்து இருக்கிறார். John Foxe எழுதிய மிகவும் பிரபலமான இந்த புத்தகமானது தற்போது Foxe's Book of Martyrs என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கி.பி 1445 க்கும்
1455 க்கும் இடைபட்ட காலத்தில் Johann Gutenberg (ஜொஹானேஸ் குட்டன்பேர்க்) என்பவர் அச்சு இயந்திரத்தை
கண்டறிந்தார். அதன் பிறகு கி.பி 1456 ஆம் ஆண்டு வேதாகமம் லத்தின் மொழியில்
அச்சிடப்பட்டது. ஒரு பக்கத்திற்கு 46 வரிகளை கொண்ட இந்த வேதாகமம் இவர்மூலம்
அச்சேறப்பெற்றதால் இன்றும் "குட்டன்பேர்க் வேதாகமம்" (Gutenberg Bible) என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே முதன் முறையாக அச்சிடப்பட்ட புத்தகம்
இந்த வேதாகமம் தான்.
கி.பி 1490 ஆம்
ஆண்டு பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் 7 வது மற்றும் 8வது
பேரரசர் ஹென்றியிடம் மருத்துவராகவும் இருந்த Thomas Linacre என்பவர்
கிரேக்க மொழியை கற்றார். அதன் பிறகு மூல மொழியாகிய கிரேக்க மொழி சுவிசேசங்களுடன்
புனித ஜெரோம் எழுதிய லத்தின் மொழி வேதாகம்மாகிய லத்தின் வல்கேட்டை ஒப்பிட்டு
பார்த்தபின் அவரது டைரியில் எழுதி வைத்த வரிகள் “கிரேக்க மொழி சுவிசேசங்கள்
எதுவும் உண்மையாக இருக்க முடியாது அல்லது அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க இயலாது”.” கிரேக்கத்தில்
இருந்து மொழி பெயர்க்கப்பட்டதால் லத்தின் மொழி வேதாகமம் அதிக முறண்பாடுகளுடன்
காணப்படுகிறது. இங்கே மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் அதுநாள் வரைக்கும்
முறண்பாடுகளுடன் கூடிய இந்த லத்தின் வல்கேட் வேதாகமத்தை யாராவது பிற மொழிகளுக்கு
மொழி பெயர்த்துவிட்டு உயிரோடு இருந்ததாக சரித்திரத்தில் குறிப்பிடபடவில்லை.
அதன் பிறகு கி.பி
1496 ஆம் ஆண்டு கிரேக்க மொழியை கற்று தேரிய ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் John Colet தனது மாணவர்களுக்கு வேதாகமத்தை ஆங்கிலத்தில் போதித்தார் பிறகு லண்டனில்
உள்ள உலக புகழ் பெற்ற பேராலயமான புனித பால் கதிட்ரலில் (St.Paul’s
Cathedral) போதிக்க
துவங்கினார். இவரது பேருறையை கேட்பதற்காக பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த
கிறிஸ்தவர்களிம் ஆர்வத்துடன் அங்கு துவங்கினர். அதுவரைக்கும் ஏதோ புரியாத லத்தின் மொழியில்
பாதிரியார் வேதம் வாசிக்க உட்கார்ந்து கேட்டுவிட்டு எதுவும் விளங்காமல் வீடு
திரும்பிய மக்களுக்கு John Colet -ன் ஆங்கில பேருரை
ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. கத்தொலிக்க பேராயர்கள் இவரை மட்டும் விட்டு
விடுவார்களா என்ன? இவருக்கும் பல எதிர்ப்புகள் வந்தது. John Colet சாதாரண ஆள் இல்லை. லண்டன்
மாநகர மேயரின் மகன். அது மட்டுமல்லாமல் அங்கே இருந்த பெருந்தலைகள் பலருடன் இவர்
நெருக்கமாக இருந்ததால் இவரை அவர்களால்
ஒன்றும் செய்ய இயலவில்லை.
Thomas Linacre மற்றும் John Colet ன் அனுபவங்களை
கேட்டு தெரிந்து கொண்ட சிறந்த பண்டிதராகிய Erasmus முரண்பாடுகளுடன் கூடிய
லத்தீன் வல்கேட் வேதாகமத்தை திருத்துவதற்காக அச்சு பொறியாளர் John Froben என்பவரின் உதவியுடன் கி.பி 1516 -ல் கிரேக்கம் மற்றும் அதன் லத்தீன்
மொழிபெயர்ப்பு இரண்டும் அடங்கிய புதிய ஏற்பாட்டை Erasmus
உருவாக்கி அச்சிட்டாரே தவிர வெளியிடவில்லை. அவர் அதை கி.பி 1522 ல் தான்
வெளியிட்டார். ‘
இந்த புதிய
ஏற்பாடானது கிரேக்க மூல பிரதிகளில் இருந்து நேரடியாக லத்தீனுக்கு
மொழிபெயர்க்கப்பட்டதால் லத்தீன் வல்கேட்டில் இருந்த எல்லா குறைபாடுகளும்
நீக்கப்பட்டு ஒரு சரியான வேதாகமமாக திகழ்ந்தது. இதனை உணர்ந்த பத்தாவது ரோம
பாப்பரசர் லியோ அது நாள் வரை இருந்து வந்த “வேதாகமத்தை
ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது சட்டத்திற்கு எதிரானது” என்ற தவறான
கோட்பாட்டை கை விட்டார். கிரேக்கம் மற்றும் லத்தீன் இரண்டும் அடங்கிய புதிய
ஏற்பாடு அந்த வருடமே அச்சிடப்பட்டது.
இராணுவ
அதிகாரியாகவும் சிறந்த ஆன்மீக தலைவராகவும் இருந்தவர் William Tyndale. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் எம்.ஏ படித்தவர் இவர். எட்டு
மொழிகளில் வல்லுநராகவும் விளங்கினார். கி.பி 1524 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்த
போது முதன் முதலில் புதிய ஏற்பாட்டை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சிட்டார் ஆனால் எதிர்ப்புகள் அதிகம் இருந்ததால்
அடுத்த ஆண்டு கி.பி 1525 ஆம் ஆண்டு அதை வெளியிட்டார். இங்கிலாந்து அரசால் அந்த
புதிய ஏற்பாட்டின் மொத்த பிரதிகளும் லண்டனில் உள்ள St Paul's Cross தேவாலயத்தில்
வைத்து எரிக்கப்பட்டது.
ஆனாலும் துளியும்
அச்சமில்லாத வில்லியம் டென்டல் (William Tyndale) கி.பி. 1530 ஆம் ஆண்டு பழைய ஏற்பாட்டின் முதல்
ஐந்து பகுதிகளையும் தனித்தனி தலைப்புகளில் ஐந்து புத்தகங்களாக ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்தார். இவரால் மொழி பெயர்க்கதான் முடிந்ததே தவிர வெளியிட முடியவில்லை.
கி.பி. 1535 ஆம் ஆண்டு சிறை பிடிக்கப்பட்டு கி.பி 1536 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6
ஆம் தேதி இங்கிலாந்து அரசால் கட்டிவைத்து எரித்து கொல்லப்பட்டார். “என் தேவனே
இங்கிலாந்து மன்னனின் கண்களை திறந்தருளும்.” இது
தான் அவர் கடைசியாய் கடவுளிடம் மன்றாடியது. இவரது மன்றாடிற்க்கு அடுத்த ஆண்டே விடை கிடைத்தது. ஆனால் அதனை கண்டு மகிழ
அவர்தான் உயிரோடு இல்லை. பிற்காலத்தில் வெளிவந்த பிரபல கிங் ஜேம்ஸ் வெளியீட்டில்
83 % வில்லியம் டென்டலின் புதிய ஏற்பாட்டையும் 76 % இவரது பழைய ஏறபாட்டையும் ஒத்து
காணப்படுகிறது.
மார்டின் லூதர் பற்றி
நாம் முன்பே கொஞ்சம் பார்தோம் அல்லவா, இப்போது மேலும் பார்போம். பாப்பரசர்கள்
சொல்வதே வேதவாக்காக இருந்த அந்த காலகட்டத்தில் முதன்முதலாக பாப்பரசர்களையும்
அவர்களின் மூட போதனைகளையும் எதிர்த்து குறல் கொடுத்தவர் இவர். கத்தொலிக்க
திருச்சபையின் 95 தவறுகளை (95 Theses) பட்டியலிட்டு கி.பி 1517 ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இரவு விட்டன்பர்க் நகரின் தேவாலய கதவின் மீது தொங்கவிட்டது
தான் அவர் இட்ட பிள்ளையார் சுழி. குற்றசாட்டுகளை கதவில் ஆணியடித்து தொங்கவிட்ட
அன்றய தினமே அந்த 95 குற்றசாட்டுகளையும் தன் கைப்பட ஒரு காகிதத்தில் எழுதி
கத்தொலிக்க திருச்சபையின் Brandenburg நகர பேராயர்களான
Albert of Mainz மற்றும்
Magdeburg ஆகியோருக்கு
அனுப்பி வைத்தார். அந்த குற்றச்சாட்டுகளை பற்றிய செய்தி இரண்டு வாரத்திற்குள்
ஜெர்மனி முழுவதும் பரவியது. இரண்டே மாதத்திற்குள் ஐரோப்பா முழுவதும் பரவியது.
மார்டின் லூதரின் நெருங்கிய நண்பரான Christoph von Scheurl என்பவரும்
மேலும் சில நண்பர்களும் சேர்ந்து கி.பி 1518 ஆம் ஆண்டு மார்டின் லூத்தர் வெளியிட்ட
95 குற்றசாட்டுகளையும் லத்தின் மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழி பெயர்த்து
வெளியிட்டனர்.
அதுமட்டுமல்ல கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகள்
மற்றும் சமயக் கோட்பாடுகளில் நிகழ்ந்த திரிபுகள் மற்றும் திணிப்புகளை உலகுக்கு
வெளிக்கொணரவும் அதிலும் முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால்
பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கத்தையும், சபையின்
முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கத்தையும் (சீமோனி) விட்டு கிறிஸ்தவத்தை மீட்டெடுக்க கி.பி 1517 ஆம்
ஆண்டு கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) என்னும் இயக்கத்தை துவங்கினார். இவரது இந்த செயல் 1500 ஆண்டுகளாய்
யாராலும் அசைக்க முடியாத கத்தொலிக்க திருச்சபையின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண
வைத்தது. Erasmus Bible வெளியிடப்பட்ட
அடுத்த ஆண்டு கி.பி 1523 ல் மார்டின் லூதர் ஜெர்மன் மொழியில் German
Pentateuch என்ற பெயரில் (அதாவது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து
ஆகமங்கள் ஆதியாகமம் முதல் உபாகமம் வரை) மொழி பெயர்த்து வெளியிட்டார். மேலும் ஆறு
ஆண்டுகளுக்கு பிறகு கி.பி 1529 ல் ஜெர்மானிய புதிய ஏற்பாட்டை (German New
Testament) வெளியிட்டார். அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1530 ல் முழு
வேதாகமத்தையும் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். லூதர்
இம்மொழிப்பெயர்ப்புகளைத் தன் சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும்படி மாற்றி
அமைத்தார். "மட்டும்" என்னும் சொல்லை "நம்பிக்கை"
என்னும் சொல்லுக்குப் பின் சேர்த்து, உரோமையர் 3:28 ஐ "நம்பிக்கையின் வாயிலாக மட்டுமே எவரும் கடவுளுக்கு
ஏற்புடையவராக முடியும்" என மொழிபெயர்த்தார். மேலும் “14
அப்போகரிபாக்களும் முதன்முறையாக இவரது வேதாகமத்தில் தான் முழுவதுமாக
நீக்கப்பட்டது” என்பது இங்கே குறிப்படப்பட வேண்டிய செய்தி.
வேதாகமம் உருவான கதை பாகம் 6
விரைவில்...
Subscribe to:
Posts (Atom)